காலை குளிர் சாதனப்பேருந்தில்
கடைசி இருக்கையோரம் அமர்ந்து
அனைவரையும் கண்காணித்திருந்தேன்.
இரண்டாம் நிறுத்தத்தில்
கருப்பாய் உயரமாய் பளிச்சென ஏறினான்
இருவரின் கண்களும் மோதிக்கொண்டன.
உடனே தோழிக்கு குறுந்தகவல் அனுப்பினேன்
இரண்டாம் முறையாக கண்கள் சந்தித்தன
அவசர அவசரமாக மீண்டும் திரும்பினோம் இருவருமே.
ஐந்நூறு ருபாய் நோட்டைக்கொடுத்து
நடத்துனரிடம் திட்டு வாங்கிக்கொண்டான்
எனக்கு சிரிப்பில் புரையேறி கன்னம் விரிந்தது
பக்கத்து இருக்கை பயணி சந்தேகமாய் பார்த்தார்
இருமுவதாய் எவ்வளவு நேரம் நடிப்பது.
இப்போது சின்ன வெட்கம் அவனிடம்
ஆண்கள் வெட்கப்படுவதும் அழகாய்த்தான் இருக்கிறது.
அவனது புன்னகையுடன் கூடிய பார்வையை உணர முடிந்தது
எங்கள் பார்வைகள் அடிக்கடி இப்போது சகஜமாய்.
இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது.
கண்பார்வை கையசைக்க இறங்கி நடந்தேன்.
அந்த நாள் முழுக்க அழகாக இருந்தது
October 31, 2010
குளிர்சாதனப் பேருந்தில்!
Advertisement
1 Comment »
RSS feed for comments on this post. TrackBack URI

enna de muniyamma…..
seri illaye… iru appa ta solraen
Comment by Ramesh — October 31, 2010 @ 5:46 pm |