தான் படித்த மனோதத்துவத்தை
என்னிடம் காட்டினாள் தோழி.
பேப்பரையும் பென்சிலையும் தந்தாள்,
இதுவரை கற்றதை மறந்து போ என்றாள்.
பெரிதாக ஏதும் கற்காதலால்
மறத்தல் எளிதாக இருந்தது.
முதல்முறை பென்சில் எடுக்க நேர்ந்தால்
என்ன கிறுக்குவாயோ அதை கிறுக்கு என்றாள்,
ஆண்குழந்தைகள் கோடுகள் போடுவார்கள்
அதிகார மனோபாவம்,
பெண்குழந்தைகள் வட்டம் போடுவார்கள்
அடங்கிக்கொள்ளும் மனோபாவம்,
விளக்கியவாறே என் கிறுக்கலை பார்த்தாள்
சுதந்திரமாய் கோடுகள் போட்டுவிட்டு
குறுக்கே வேலிக் கோடுகள் போட்டிருந்தேன் நான்.
சொல்ல ஏதுமில்லையென கை விரித்தாள்.
Advertisement

olunga add fb sharing link too .. i wanna share few..
Comment by Preethi — January 17, 2011 @ 4:10 pm |
athan epdi panrathunu theriyathe
Comment by royalblacksandy — January 17, 2011 @ 4:58 pm |