Royalblacksandy's Blog

December 29, 2010

என்ன நான் சொல்றது?!?!

Filed under: Uncategorized — royalblacksandy @ 1:30 pm

ஏற்கெனவே இரு பெண்கள் அமர்ந்திருந்த காலியான பேருந்தின் இருக்கையில் மூன்றாவதாக அமர வந்த அங்கிளிடம் சங்கடத்தைத் தவிர்க்க அங்க இடமிருக்கு என ஒரு பையனுக்கு பக்கத்து சீட்டைக் காண்பித்தேன்.“நான் ஸ்கூல் மாஸ்டர்,என்கிட்ட உன்னமாதிரி எவ்ளோ பொண்ணுங்க படிக்கிறாங்க,ஒருத்தர்கூட இப்படி சொன்னதில்ல..” ஃபீல் பண்ணித் தள்ளிவிட்டார். ## இது எனக்கு தேவயா? ஓவர்.

எடைக்கு எடை போட்டாகூட 70க்குமேல் தேறாத உனக்குப்போய் 100 பவுன் கேட்கிறாள் உன் அன்னை.என்ன ஏதென்று விசாரித்தால் செய்கூலி சேதாரமாம்.

எழுதி முடிக்கும்முன் யாரேனும் எட்டிப் பார்த்தால் கூச்சமாகவும் அசர்ந்தப்பமாகவும் இருக்கிறது அலங்காரம் முடிக்காத ஆண்டுவிழா சிறுமி போல.

நேற்று ஓடும் பேருந்தில் பள்ளி மாணவன் ஏற முடியாமல் தவறவிட்டான். விடாமல் அரை கிலோமீட்டர் ஓடி வந்தவனைப் பார்த்துவிட்டு “டிரைவர் வண்டிய நிறுத்தப்பா” என்று சொன்ன நல்லமனசுக்கு நன்றி. ## நல்லார் ஒருவர்.

ஸ்மைலிகளால் நிரம்பியிருந்தது என் வாழ்வு.அதற்கப்புறம் அந்த கடைசிக் குறுஞ்செய்தியை அனுப்பினாய். ## நான் booster போடுவதையே நிறுத்திவிட்டேன்.

ஓகே ஓகே என மட்டுமே மாறிமாறி பரிமாறிக்கொண்ட குறுந்தகவல்கள் நாம் ஓகேயில்லையென சொல்லாமல் சொல்லின.

கறுப்புப்பணம்,கறுப்பாடு,கறும்புள்ளி என பெயர் வைத்தது எல்லாமே நிறவெறியின் குறியீடுகளா? ## எங்கேயோ கேட்டது..

பொத்தேரி இரயில் நிறுத்தத்தில் மகளிர் பெட்டியில் ஓடிவந்து ஒருத்தர் ஒரு பெண்ணை திட்டி அடித்துவிட்டுப் போனார்.நானும் எதிரிருக்கைப் பெண்ணும் தடுக்கவா பிடிக்கவா என புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தோம்.அந்த பெண் நிதானமாய் “எங்கூட்டுக்காரர்தான்,சொல்லாமலே இந்த பெட்டில ஏறிட்டேன்,அதான் தொலச்சிட்டு தவிச்சிப்போய் கண்டதும் அடிச்சிப்புட்டாரு” ## வெள்ளந்தித் தனமும் வெறித்தனமும்

என்ன சொல்லியும் உனக்குப் புரியப் போவதில்லை…புரியும்படி சொல்லவும் எனக்கு தெரிவதில்லை.. முடிவு உன்கையில்தான் என எனக்கு புரியாமலில்லை ## HCM Performance document

புரியவில்லையென ஆஜர் ஆகி நான் இடும் பின்னூட்டத்திற்குப் பிறகு சிலாகித்து எழுதப்படும் பின்னூட்டங்கள் சொல்கின்றன மூளை மழுங்கிவிட்டதென ## தீயா யோசிக்கணும் சந்தியா..

பேசாமல் இந்த வேலையைவிட்டு வெளிநாடு போய் கைநிறைய சம்பாரிச்சி கால்மேல் கால்போட்டு ஓய்வு நேரத்தில் ப்லொக் போடலாமென்றிருக்கிறேன் ##கலாம் கேட்டுக் கொண்டதால் சும்மாயிருக்கிறேன்.

உள்ளூரில் இருந்தவரை தீபாவளியன்னிக்கு காலை பட்டிமன்றம் பார்த்து மட்டுமே கொண்டாடியவர்கள், அயல்நாடு போய் thanksgiving photos என்று பேஸ்புக்கில் போடும்போது உண்டாகும் உணர்வு வயிற்றெரிச்சலா பொறாமையா பரிதாபமா ?

ஒருவார காலம் தூக்கத்தை கெடுத்துக்கொண்டு vinavu.com, maamallan.com and charuonline.com படித்தது ஏககாலத்தில் சன் மற்றும் ஜெயா மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்ததுபோல் இருந்தது.நல்ல பிள்ளையாய் மீண்டும் ch1 மட்டுமே படிக்கப் போகிறேன்.

Advertisement

2 Comments »

  1. eh sandy..
    its super..
    fullave ne than sindhichiya..
    charu /sujatha thaakangal niraya.. :)
    i like it..

    Comment by Preethi — January 17, 2011 @ 4:09 pm | Reply

    • sathiyama nan than de :) yaa big bosses thaakkam illama ezhutha kashtam.. :)
      ipathan kathukaren :)

      Comment by royalblacksandy — January 17, 2011 @ 4:56 pm | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Theme: Rubric. Blog at WordPress.com.

Follow

Get every new post delivered to your Inbox.