ஆனந்த விகடனில் செழியன் எழுதிய உலக சினிமா மிகப் பிடித்திருந்தது.கற்றதும் பெற்றதும்,ஒ பக்கங்களுக்கு அடுத்து விரும்பி படித்த தொடர்கட்டுரைகள் அவை.அதில் அவர் நிறைய படங்களை பற்றி எழுதியிருந்தாலும் எனக்கு கொஞ்சம் என் ரேஞ்சுக்கு தோன்றியவை E.T: Extra Terrestrial-உம்,The birds-உம்.இரண்டாவது தரவிறக்க கிடைக்காததால் முன்னதையே தேர்ந்தெடுத்தேன்.
அயல்கிரகவாசிகள் என்றால் நிசத்திலும் கிரகம் பிடித்தவர்களாயிருப்பர் போன்ற கற்பனைகளே மிகுதி.ஒரு பரந்த காட்டில் சில அயல்கிரகவாசிகள் தாவரமாதிரிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.நெருப்பில் தீய்ந்தாற்போல் வழவழத்து இறுகிப்போன தோலுடைய நீளமான கைகள் காட்டப்படுகின்றன.மோப்பம் பிடித்து மனிதர்கள் வந்துவிட அவசர அவசரமாக கூன் விழுந்த மனிதர்கள் விண்கலத்தில் நுழைந்து கிளம்புகிறார்கள், ஒரே ஒரு கிரகவாசியை மட்டும் விட்டுவிட்டு.வீடு(?) திரும்ப எந்த நம்பிக்கையுமில்லை,அதைவிட சுற்றிலும் மனிதர்கள்.அழும் குழந்தையைப்போல் விண்கலத்தை பார்த்தவாறு ஓடுகிறது.அங்கே ஒரு வீட்டில் அண்ணன் மற்றும் அவன் நண்பர்களால் சீண்டப்படும் சிறுவன்.(ஒப்புக்கு சப்பாணியாக இருந்திருக்கிறீர்களா?சின்ன வயதில் என்னைவிட வயதில் மூத்த அக்கா அண்ணன்கள், விளையாட்டில் சேரும்போது சொல்வார்கள்,ஹேய் நீ OPனு, இந்த பையனும் கிட்டத்தட்ட அதேமாதிரிதான்).வரவழைத்திருந்த பிட்சாவை வாங்க அவன் வாசலுக்குப்போகும் நேரம் தட்டுமுட்டு சாமான்கள் நிறைந்த ரூமிலிருந்து ஏதோ சத்தம்,கையிலிருந்த பந்தை அவன் எறிய அது திருப்பி எறிகிறது.அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறான்.அம்மா,அண்ணன் அண்ட் கோ வரும்போது அங்கே அது இல்லை.குழப்பத்தோடு நகர்கிறான் சிறுவன் எலியட்.அனைவரும் உறங்கியபின்னர் அதன் பாதச்சுவடுகள் பின்னர் போகிறான்.இருவரும் சந்திக்கும் நேரம் அதுவும் அவனைப்பார்த்து கிறீச்சிடுகிறது.அவனும் அலற தெறிக்க ஓடி மறைகிறது.அவன் அதை வீட்டுக்கு வரவழைக்க சின்ன வயதில் கேட்ட கதைகளைப்போல் ஜெம்ஸ் போன்ற ஏதோவொன்றைத் தூவிக்கொண்டே வருகிறான்.அதுவும் வருகிறது.அவனது செய்கைகளையே அதுவும் திருப்பி செய்கிறது.அந்த கணத்தில்தான் இருவரும் நண்பர்களாகிறார்களா தெரியவில்லை.அவர்களுக்கு என்ன நடந்தது,அந்த மனித கூட்டத்திடம் அது பிடிபட்டதா?உருக்கமான காட்சிகள் படத்தில்.

படத்தில் வசனம் அதிகம் இல்லை.வரும் சில வசனங்களும் முடிவில் உபயோகப்பட்டு நெகிழ்ச்சியடையச் செய்கிறது.அதுவும் “Ouch” என வரும் வசனம் ஒன்று போதும்.எலியட்டின் தங்கையோடு இருக்கும்போது வார்த்தைகளை அது கற்றுக்கொள்வதும்,அம்மா செண்டிமெண்ட்டுக்கு எலியட்டின் தாயை முதன்முதலில் பார்க்கும்போது, “mom” என்பதும் அழகு.அழுத்தமான புன்னகைக்கு சில இடங்களும் உள்ளன,ஈடிக்கு சிறுமி பெண் வேடம் போட்டுவிடுவது உதாரணம்.குள்ளமாக,எலாஸ்டிக் கழுத்துடன் பெரிய கண்களைப் போட்டுக்கொண்டு ஈடி பார்க்கும்போது தூக்கிக்கொண்டு வந்துவிடலாம்போல்,அள்ளியணைத்து முத்தம் வைக்கலாம்போல் இருக்கிறது.ஈடியும்,எலியட்டும் பறக்கும் காட்சி நமக்கும் சிலிர்ப்பூட்டுகிறது.இதில் வரும் காற்றில் பறத்தலும்,பறக்க வைத்தலும் சாத்தியமே - magnetic levitation,telekinesis. (wikipedia!) மனிதனின் விஞ்ஞானம் எல்லைகளை விரிவுபடி]டுத்திக்கொண்டே எல்லைகளுக்குள் திரிவது.இன்று நம்பமுடியாத ஒன்றுக்கு நாளை தேற்றங்கள் எழுதப்படலாம்,அதில் கடவுளும் ஒன்றாக இருக்கலாம்.
பலரது பால்யத்திலும் ஒரு ரகசிய சினேகம் இருக்கும்.ஏதேனும் பிடித்த எதிர்வினை புரியாத பொருளை நண்பனாக வரித்துக்கொள்வார்கள்.சிலருக்கு மரப்பாச்சி,சிலருக்கு வீடியோ கேம்ஸ் கேரக்டர்,சிலருக்கு டைரி,சிலருக்கு புத்தக பாத்திரங்கள்…அப்படி ஸ்பீல்பெர்கிற்கு இள வயதில் இருந்த கற்பனை நட்புதான் ஈடி எடுக்கக் காரணம் என்கின்றனர்.இள வயதில் தாய் தந்தையரை பிரிந்து ஸ்பீல்பெர்க் வாழ்ந்த அந்த தனிமை நிறைந்த வாழ்க்கையையே எலியட்டும் வாழ்கிறான்.சாரு கூறும், “சயன்ஸ் ஃபிக்ஷன் எடுப்பதற்கு வாழ்வு பற்றிய ஒரு தரிசனம் (vision) இருக்க வேண்டும்” என்பது படம் முடிந்ததும் புரிகிறது.மனிதன் மட்டுமே எல்லா அழிவுக்கும் காரணம் எனத் தோன்றுகிறது.நம்மிலிருந்து வேறுபட்ட எதையும் சந்தேகிக்கவே நமக்குத் தெரியும்,அப்படி கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.அதிகம் லட்சியமில்லாத,இயல்பான வலிகளை உணரும்,அறிவியலுக்காக அன்பை அறுக்காத குழந்தைகளால் மட்டுமே உணரக்கூடிய விஷயம் ஈடி.
சாதாரணமாக கொஞ்சம் உருக்கமான படம் பார்த்தாலே அழும் நான், இந்த படத்தின் பல காட்சிகளுக்கும் கண்கள் கலங்கினேன்.நான் மட்டுமல்ல,இளவரசி டயானா கூட கண்கலங்கியதாக ஊடகங்கள் சொல்கின்றன(நான் எதுவும் சொல்ல வரவில்லை).இதில் ஈடி பொம்மைக்கு நடுவில் ஒளிந்திருக்கும் காட்சிதான் கில்லி படத்தில் த்ரிஷா பொம்மைக்கு நடுவில் ஒளிந்திருப்பதாக வருகிறது.
படம் என்று சொன்னால்போதாது அற்புதம் என்றே சொல்லவேண்டும்.என்ன பேசி என்ன, என்ன சொல்லி என்ன,இந்த படத்தைப் பார்த்ததும் எனக்குப் பட்டதை வார்த்தையில் சொல்லமுடியவில்லையே!
இறுதியில் ஈடி எலியட்டிடம் “I ll be right here”,என்பது நமக்கும் சேர்த்துதானே?
ஈடி இனி என் வாழ்வுக்குமான என் செல்லம்


Hi Sandy ,,
congrats and keep on ..
first, Yu ve gotta gud pen..
I read cheziyan’s part 2 .i guess i missed et. now making my sweet home all time , i guess i cud make lil time worthy by watching ET..
Once again nice writing de..
Preethi Vasanth (St.Marys)
Comment by Preethi — January 17, 2011 @ 4:01 pm |
Thanks dear
yeah i loved that series de.. romba touchin athuvum swarasyam kedama sollirupparu 
Sure dear do watch it… unaku kandippa pidikkum!!!
Comment by royalblacksandy — January 17, 2011 @ 4:57 pm |